தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஏப்ரலில் பொதுத்தேர்வு!
தமிழகத்தில் நடப்பு ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் இறுதியில் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரலில் பொதுத்தேர்வு:
நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது கொரோனா என்ற பெருந்தொற்று. இத்தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன. இருப்பினும் கொரோனா 3வது அலை காரணமாக மீண்டும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை, ஏப்ரல் இறுதியில் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பிப்.14 முதல் உயர்நிலை பள்ளிகள் மட்டும் திறப்பு, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் உத்தரவு!
இந்த வகையில் கொரோனா பெருந்தொற்றால், 2019- 20ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மட்டும் நடந்தது. 10ம் வகுப்பு உட்பட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு இன்றி, ‘ஆல் பாஸ்’ என அறிவிக்கப்பட்டது. மேலும் அடுத்த 2020- 21ம் கல்வி ஆண்டில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக, பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளுக்கும், தேர்வுகள் இன்றி ஆல் பாஸ் என தேர்ச்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு மார்ச் 28ல் துவங்க உள்ளது.
பிப்ரவரி 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், முதல்வருடன் ஆலோசனை நடத்தி, விரைவில் தேர்வு அட்டவணை வெளியிட முடிவு செய்துள்ளனர்.பொதுத் தேர்வை ஏப் 25ல் துவங்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாமல், தேர்ச்சி பெற்று வந்துள்ளனர். இந்த வகையில் பிளஸ் 1 பொதுத்தேர்வை நடத்த ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார். மேலும் மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வான இரண்டாம் கட்ட பருவத் தேர்வு, ஏப். 26 ல் தொடங்கி மே முதல் வாரம் முடிந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.