தமிழக 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு? அரசின் எடுக்கும் முடிவு!
தமிழகத்தில் ஜனவரி 24 ஆம் தேதி 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து எவ்வித தகவல்களும் வெளிவராத காரணத்தினால் தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுக்கு கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இதையடுத்து கடந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததால் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் வழக்கமாக நடைபெறும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அரையாண்டு தேர்வை திருப்புதல் தேர்வாக மாற்றி நடத்தப்படுவதாக அறிவித்திருந்தது.
தமிழகத்தில் 2 வருடங்களாக இலவச லேப்-டாப்கள் வழங்காதது ஏன்? அரசு தரப்பு விளக்கம்!
இதனை தொடர்ந்து ஒமைக்ரான் தொற்று பரவல் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பொதுத்தேர்வு ரத்தாகி விடுமோ என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் 10 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து எவ்வித தகவல்களும் வெளிவராத காரணத்தினால் தனியாா் நா்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமாா் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஒரே மாதத்தில் இரு முறை தானிய விநியோகம்!
இது குறித்து மாநில பொதுச் செயலாளர் நந்தகுமாா் வெளியிட்ட அறிக்கையில் உயா்கல்விக்கு பதினொன்றாம் வகுப்பு பாடங்கள் அடிப்படையானவை. 10,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்துவது குறித்து வழிகாட்டுதல்கள் வெளியாகின்றன. ஆனால் பிளஸ் 1 தேர்வு குறித்து எவ்வித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் மாணவா்கள் பயிற்சி ஏதும் மேற்கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனா். 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் அவா்களின் உயா்கல்வி கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.