தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அரசுக்கு முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததன் விளைவாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் முதல் நடைபெற உள்ளது. தற்போது பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளதால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனா காரணமாக இந்த ஆண்டு குறைவான நாட்களில் நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்குரிய பாடங்களை இன்னும் நடத்தி முடிக்கவில்லை. அதனால் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை என வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல் – அகவிலைப்படி உயர்வு கிடைக்காது?
அதன் காரணமாக இந்த ஆண்டு மே மாதத்தில் தான் பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ளது. மேலும் அறிவிப்பில் கூறியதாவது, இதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொதுத்தேர்வுக்கான நாட்கள் நெருங்கி கொண்டு வருவதால் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ExamsDaily Mobile App Download
அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொரோனா ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் தேர்வினை நடத்த பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் 3,500 மையங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆசிரியர் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தேர்வு மையங்களை நடத்தினால் தான் மாணவர்கள் தனிநபர் இடைவெளியை பின்பற்றி கொரோனா அச்சமின்றி தேர்வு எழுதுவார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.