CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சரிடம் முக்கிய கோரிக்கை!
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் கொரோனா காரணமாக அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதை தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரை என அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அத்துடன் நடப்பாண்டில் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு – மாநில அரசு நடவடிக்கை!
அதனால் பொது தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 17 முதல் 24 ஆம் தேதி வரை முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்றது. அத்துடன் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுகளில் கூடுதல் நடைமுறை பின்பற்றபட்டது. இந்த தேர்வு முடிந்த 15 நிமிடங்களில் மைய கண்காணிப்பாளர்கள், தேர்வு பார்வையாளர் முன்னிலையில் மாணவர்களின் ஓஎம்ஆர் விடைத்தாள்களை உறையில் வைத்து சீல் வைக்க வேண்டும்.
2022ம் ஆண்டு பள்ளிகளுக்கு 113 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் பட்டியல்!
மேலும் இவர்கள் இதில் தேர்வு நேரத்தை குறிப்பிட்டு கையெழுத்திட வேண்டும். அடுத்ததாக அந்த உறையை மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அத்துடன் தேர்வில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டால் மைய கண்காணிப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதையடுத்து இந்த முதல் பருவத்தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ பள்ளிக்ள் மேலாண்மை கூட்டமைப்பு ஒன்றிய அமைச்சர் பிரதானுக்கு கடிதம் மூலமாக கோரிக்கை வைத்துள்ளார்கள்.