தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது பொதுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது நேரடி வகுப்புகள் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ஏப்ரல் 8 முதல் டிக்கெட் விநியோகம் துவக்கம்!

அதன்படி பொதுத்தேர்வுக்கான தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை நடைபெறும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 9ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுத்தேர்வினை சுலபமாக எதிர்கொள்ளும் வகையில் முதல் மற்றும் 2ம் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை பொதுத்தேர்வு போல நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் முதல் திருப்புதல் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பாக சமூக வலைதளங்களில் வெளியானது. இதே போல 2ம் திருப்புதல் தேர்விலும் கணித பாடத்திற்கான வினாத்தாள் வெளியாகியுள்ளது. அதனால் பொதுத்தேர்வினை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பொதுத்தேர்வு இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. அதனால் 10, 11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!