தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11, 12 படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் எழுத உள்ளனர். இந்த நிலையில் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து முழு விவரத்தையும் இப்பதிவில் பார்ப்போம்.
கல்வித்துறை அறிவிப்பு:
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தார்.
TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
அதன்படி தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி முதல் மே 28ம் தேதி வரை நடைபெறும். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9ஆம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும், ஜூன் 17 வெளியிடப்படும். பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான கால அட்டவணை ஒன்றை தயாரித்து அதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் அளித்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் நடைபெற உள்ள பொதுதேர்வை முறையாக நடத்த வழிகாட்டுதல் குழு கூட்டம், மாநிலத்தில் இருக்கும் மாவட்டங்கள் வாரியாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சமீபத்தில் சென்னை மாவட்ட ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்களுக்கான கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்வு பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரை கூறியுள்ளார். அது என்னவென்றால் பொதுத்தேர்வுக்கான வினாத்தாளை மிகவும் கவனமான முறையில் கையாள வேண்டும் என்றும் தேர்வு நேரங்களில் அலட்சியம் காட்டினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும், தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் வந்தால் அவர்களை காத்திருக்க வைக்காமல் தேர்வு மையங்களை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.