தமிழகத்தில் மின்மீட்டர் குறித்து பொதுமக்களுக்கான அறிவிப்பு – மின்சாரவாரியம் தகவல்!
தமிழகத்தில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த மீட்டர் கருவியில் பழுது ஏற்பட்டு மின் கணக்கீட்டில் குழப்பம் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு பழுதாகியுள்ள மீட்டர் கருவிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
மின்வாரியம்:
தமிழகத்தில் விவசாயம், குடிசை வீடுகள் உள்ளிட்டவர்களுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து மற்ற வீடுகளில் மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க பயன்படுத்தப்படும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை கண்டறிய முடிகிறது. இதனை தொடர்ந்து வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதற்கும் மேற்பட்ட யூனிட் பயன்படுத்துவோருக்கு முழு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து வீடுகளில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்சார அளவை மின் ஊழியர்கள் நேரில் சென்று கணக்கீடு செய்து வருகின்றனர். அதே போல் மற்ற பகுதிகளில் மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கின்றனர். மேலும் தற்போது பல்வேறு இடங்களில் அதிக மின் பயன்பாடு உள்ள இணைப்புகளில் குறைவான மின் பயன்பாடு உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் குறைவான மின் பயன்பாடு உள்ள இடத்தில் அதிக மின்பயன்பாடு உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
7 – 11 வயதினருக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு பரிந்துரை – டிசிஜிஐயின் முடிவு என்ன?
இதற்கு மின் கணக்கீடு செய்ய பயன்படுத்தப்படும் மீட்டர்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளே காரணமாகின்றன. இதையடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் பொருட்டு மின்வாரியம் வழங்கியுள்ள அறிவுரைப்படி, மின் ஊழியர்கள் வீட்டில் மின் கணக்கீடு செய்யும்போது மீட்டர்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருப்பின் அதனை உடனடியாக அகற்றி புதிய மீட்டர்களை பொருந்துமாறு வலியுறுத்தியுள்ளது. அத்துடன் இதனை முறையாக அனைத்து உதவி பொறியாளர்களும் பின்பற்றுமாறு மின்வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.