பொதுமக்களே அலர்ட்.. தமிழகத்தில் நாளை (செப்.27) இந்த ஏரியாக்களில் பவர் கட்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மின்தடை ஏற்படும். அந்த வகையில் நாளை (செப். 27) குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட 10 துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மின்தடை பகுதிகள்:
தமிழகம் முழுவதும் மின்சார துறையின் கீழ் இயங்கி வரும் துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த நாள் மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை மேற்கொண்டால் தான் தடையில்லாமல் சீரான மின்சாரம் மக்களுக்கு கிடைக்கும். அந்த வகையில் திருச்சி மாவட்டம் குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட 10 துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நாளை செப். 27 நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவல் மத்தியில் இயங்கும் பள்ளிகள் – திட்டமிட்டபடி தொடங்கிய காலாண்டு தேர்வு!
அதன் படி குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை, கொசூர், நச்சலூர், வல்லம், தோகைமலை, மாயனூர், சிந்தாமணிபட்டி,பஞ்சப்பட்டி, பாலவிடுதி மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளில் நாளை ( செப். 27) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அது மட்டுமில்லாமல் இந்த 10 துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், மின்தடைக்கு தகுந்தாற் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு மின் தேவை இருப்பின் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்