பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி – அறிவுரைக் கழகம் அறிவிப்பு!
இணையதளத்தில் ஆபாசமாக பேசியது மற்றும் தடை செய்யப்பட்ட செயலியை பயன்டுத்தியது போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்துள்ளது.
குண்டர் சட்டம்:
மதன் என்பவர் டாக்சிக் மதன் 18 பிளஸ் என்ற யூ டியூப் சேனல் மூலமாக தடை செய்யப்பட்ட பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்களை ஆபாசமாக பேசிக் கொண்டு விளையாடியதாக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தமிழகத்தில் திரையரங்குகள், பள்ளி & கல்லூரிகள் திறக்க அனுமதி – கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு
இதனால் மதன் தலைமறைவாகி விட்டார். அவரை ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி மாநகர காவல் ஆணையர் ஜூலை 5 ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை ரத்து செய்ய கோரி மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தொழில் போட்டியாளர்கள், தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
முன்னதாக இந்த மனு விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசும், சென்னை காவல் ஆணையரும் பதிலளிக்கும்படி கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக கடந்த 6-ஆம் தேதி அறிவுரைக்கழகத்தில் விசாரணை நடைபெற்றது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டத்தை அறிவுரைக் கழகம் தற்போது உறுதி செய்துள்ளதாக தெரிவித்தனர்.