தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான உளவியல் விழிப்புணர்வு திட்டம் – முதல்வர் துவக்கம்!
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வரும் நிலையில் மாணவர்களுக்கான உளவியல் விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து முழு விவரத்தை பார்க்கலாம்
மாணவர்கள் விழிப்புணர்வு திட்டம்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை கவனித்து வந்தனர். அதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். சமீபத்தில் பள்ளி மாணவ மாணவிகளின் தற்கொலை சம்பவம் அரங்கேறி வருகிறது. அதனால் அரசுப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உளவியல் விழிப்புணர்வு திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மூலமாக சிறப்பு மருத்துவக் குழுவினர், 805 வாகனங்களில் ஒவ்வொரு பள்ளியாகச் சென்று மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த திட்டமானது சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 27 ஆம் தேதி நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கொரோனாவிற்கு பின் தற்போது உடல்நிலை சரியாகி வருகிறேன். ஆனாலும் சற்று சோர்வு இருக்கிறது இருந்தாலும் மாணவர்களை பார்ப்பது உற்சாகமாக இருப்பதாக தெரிவித்தார்.பல குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் தான் பள்ளிக்கு வருகின்றனர். மருத்துவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது என சொல்லி இருக்கின்றனர்.
Police Constable ஆவது உங்கள் கனவா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்! இலவச பயிற்சி அறிவிப்பு
அதனால் அரசு குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. மேலும் மாணவர்களுக்கு மனநிலை சரியாக இருந்தால் படிப்பு தானாக வரும். பள்ளிகள் பாடங்கள் நடத்துவதுடன் அறிவு, ஆற்றல், மனம், உடல் ஆகியவற்றையும் வளப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் பாதி பெற்றோர்கள் போல இருக்க வேண்டும். கல்வி நிலையங்கள் மதிப்பெண் மையங்களாக இல்லாமல், மதிப்புயர் கூடங்களாக மாறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.