ஜூன் 30ம் தேதியன்று விண்ணில் ஏவப்படும் PSLV-C53 ராக்கெட் – நாளை கவுண்ட் டவுன் துவக்கம்!
வரும் ஜூன் 30ம் தேதியன்று சுமார் 3 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட இருக்கும் PSLV-C53 ராக்கெட்டிற்கான கவுண்ட் டவுன் நாளை (ஜூன் 29) துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
PSLV-C53 ராக்கெட்
தற்போது 3 செயற்கை கோள்களுடன் PSLV-C53 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்ட் டவுன் நாளை (ஜூன் 29) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜூன் 30ம் தேதியன்று ஏவப்பட இருக்கும் PSLV-C53 ராக்கெட்டிற்கான 25 மணிநேர கவுண்ட் டவுன் நாளை மாலை துவங்குகிறது. இந்த செயற்கை கோள்கள் அனைத்து துல்லியமான படங்களையும் எடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.
Exams Daily Mobile App Download
இப்போது 3 செயற்கை கோள்களை எடுத்து செல்லும் PSLV-C53 ராக்கெட், அவைகளை பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக் கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பாகமான பிஎஸ் 4 இயந்திரம் மூலம் எதிர்காலத் தேவைக்கான சில பரிசோதனை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தியாவின் வர்த்தக திட்டமிடலுக்காக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கை கோள்களையும் சுமந்து செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் – மாதம் ரூ.500 செலுத்தினால் போதும்!
அந்த வகையில், சிங்கப்பூருக்கு சொந்தமான டிஎஸ்-இஒ, நியூசர் உள்ளிட்ட செயற்கைக் கோள்கள் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வழியாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து புறப்படுகிறது. இப்போது ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்வையிடுவதற்காக இஸ்ரோ அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ராக்கெட்டை பார்ப்பதற்கு விரும்புபவர்கள் www.isro.gov.in என்ற இஸ்ரோ இணையதளத்தில் ஜூன் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்து அனுமதிச் சீட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.