திடீரென வயிற்றுவலியால் துடிக்கும் முல்லை, அதிர்ச்சியில் கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!
முல்லைக்கு தற்போது செயற்கை முறை சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரேன பயங்கரமான வயிற்றுவலியால் முல்லை துடிப்பது போன்றும்,குடும்பத்தினர்கள் பயப்படுவது போன்றுமான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கு தற்போது செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை நடைபெற்று கொண்டிருப்பதால் முல்லை கர்ப்பமுறுவாரா, சிகிச்சை வெற்றி பெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார். செயற்கை முறை கருவுறுதலுக்கு மட்டுமே 5 லட்சம் வரைக்கும் குடும்பத்தினர்கள் செலவு செய்துள்ளனர்.
பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகும் பாரதி – இவருக்கு பதில் இனி இவர் தான்! ரசிகர்கள் ஷாக்!
முல்லையின் சிகிச்சை முடியும் வரைக்கும் வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைத்துள்ளனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த பிளானிற்கு ஒப்புக்கொண்டாலும் மீனாவிற்கு மட்டும் சுத்தமாக பிடிக்கவில்லை. அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி சண்டை போட்டார். பின்பு, எப்படியோ குடும்பத்தினருக்காக ஒப்பு கொண்டார். பின்பு, ஜீவாவும், மூர்த்தியும் சேர்ந்து 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள். இந்த சிகிச்சைக்காக 5 லட்சம் வரைக்கும் செலவு செய்தும் கூட கண்டிப்பாக இந்த சிகிச்சை வெற்றி பெறும் என சொல்ல முடியாது.
Exams Daily Mobile App Download
சில சமயங்களில் தோல்வியில் கூட முடிய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியில் முடிந்தால் மீண்டும் 5 லட்சம் கட்ட வேண்டும். இதனால் செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா என குடும்பத்தில் உள்ள அனைவரும் பயத்தில் உள்ளனர். தற்போது முல்லைக்கு சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில் திடீரேன பயங்கரமான வயிற்றுவலியால் முல்லை துடிப்பது போன்றும், ஒருவேளை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டதோ என குடும்பத்தினர்கள் பயப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.