கட்டிட வேலை செய்து குடும்ப கடனை அடைக்கப்போகும் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு கடன் வாங்கி டிரீட்மென்ட் பார்த்ததால் குடும்பத்தில் பெரிய பிரச்சனை வருகிறது. அதனால் முல்லையும் கதிரும் வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். இந்நிலையில் கட்டிட வேலை செய்து கதிர் முல்லையை பார்த்துக் கொள்ள இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்தின் பிறந்தநாளுக்கு வந்த இடத்தில் பெரிய பிரச்சனை வருகிறது. முல்லை டிரீட்மென்ட் பார்க்க கடன் வாங்க அதை கொடுக்க பணம் இல்லாமல் ஜீவா மீனாவிடம் பணத்தை வாங்கி கொடுக்கிறார். அதனால் மீனாவின் அப்பா சண்டை போட முல்லை அம்மா பதிலுக்கு சண்டை போட தனத்தின் அம்மாவும் அவருடைய அண்ணனும் சண்டை போட என வாக்குவாதம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. எவ்வளவு பேசியும் சண்டை நிறுத்தப்படவில்லை.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த திருப்பம் – நிலா பாப்பாவுடன் மருத்துவமனையில் அம்ரிதா!
அதனால் மூர்த்தி வீட்டை விட்டு வெளியே போகவேண்டுமா என கேட்க ஆனால் இவர்கள் பேசியது அனைத்தையும் தாங்க முடியாமல் கதிர் நான் முல்லை உடன் வெளியே சென்றுவிடுகிறேன் என சொல்கிறார். மூர்த்தி நீ வெளியே போனால் நாங்க உன்னுடன் பேசமாட்டோம் என சொல்ல பரவாயில்லை என சொல்லிவிட்டு கதிர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கடையில் வேலை செய்யாமல் நான் பணத்தை கொடுத்துவிட்டு தான் இந்த வீட்டிற்கு வருவேன் என கதிர் சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
குடும்பத்தில் அனைவரும் தடுத்து கூட கதிர் அவர்கள் பேச்சை கேட்கவில்லை. தனம் கதிரிடம் கெஞ்சி அழுதும் கேட்காமல் முல்லையை அழைத்துக் கொண்டு கதிர் வெளியே சென்றுவிடுகிறார். வெளியே சென்ற கதிர் எங்கே போவது என தெரியாமல் வருத்தப்பட அப்போது நண்பர் ஒருவர் தங்குவதற்கு இடம் கொடுக்கிறார். மறுநாள் கதிர் பல இடங்களில் வேலை தேடி அலைய அவருக்கு கட்டிட வேலை தான் கிடைக்கிறது. அதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.