முருகன் வீட்டில் தஞ்சமடையும் கதிர் & முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் வீட்டை விட்டு வெளியேறும் கதிர் மற்றும் முல்லை இருவரும் முருகன் வீட்டில் தஞ்சமடைவது போல ப்ரோமோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கதைக்களத்தில் கதிர் மற்றும் முல்லை இருவரும் அதிரடியாக வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். அதாவது, தனத்தின் பிறந்தநாளுக்காக மூர்த்தி வீட்டுக்கு வரும் முல்லை, மீனா மற்றும் தனத்தின் குடும்பம் எல்லாரும் சேர்ந்து முல்லையின் சிகிச்சைக்காக செலவழித்த பணத்தை பற்றி பேசி பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கின்றனர்.
இதனால் வீட்டில் உள்ள அனைவரும் காயப்பட, இப்போது கதிர் மற்றும் முல்லையால் தான் இந்த பிரச்சனை உருவானது என்று சொல்லி அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இது குறித்த ப்ரோமோ ஒன்று சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அடுத்தகட்ட கதைக்களத்தில் வீட்டை விட்டு வெளியேறும் கதிர் மற்றும் முல்லை இருவரும் செல்வதற்கு இடம் இல்லாமல் இருக்கும் போது முருகன் வந்து அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்து செல்கிறார்.
Exams Daily Mobile App Download
மறுபக்கத்தில், ஜனார்தனனிடம் பேசும் மீனா எனக்கு எது வேண்டுமானாலும் நான் என் வீட்டில் சொல்லியே வாங்கிக்கொள்கிறேன். நீங்கள் இங்கிருந்து கிளம்பி விடுங்கள் என்று அவர்களை அனுப்பி வைக்கிறார். தொடர்ந்து முருகன் வீட்டிற்கு வரும் முல்லை, வீட்டில் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டு குழந்தை பிறப்பதற்காக சிகிச்சை எல்லாம் வேண்டாம். நான் இயற்கையாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறேன் என்று கதிரிடம் சொல்லி அழுவது போல அடுத்த கட்ட கதைக்களம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.