கதிருக்கு மறுமணம் செய்ய முடிவு செய்யும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த திருப்பம்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு டிரீட்மென்ட் மூலமாக குழந்தை பிறக்க முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதால் கதிருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஏகப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்து குடும்பமே ஒற்றுமையுடன் இருந்து வரும் நிலையில் அடிக்கடி சில பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. அதை எல்லாம் மீறி எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மை கதிருக்கு தெரிய வர ஆனால் கதிர் அதை அனைவரிடமும் மறைகிறார். ஆனால் முல்லைக்கு சந்தேகம் இருக்க அவர் மருத்துவமனைக்கு சென்று உண்மையை தெரிந்து கொள்கிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் வரும் புது கதாபாத்திரங்கள் – அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
அதனால் மனம் உடைந்து போன முல்லை கதிருக்கு நான் வேண்டாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியே போகிறார். கதிர் முல்லையை காணாமல் ஊரெல்லாம் தேட ஊர் எல்லையில் அவர் இருக்கிறார். அவரிடம் வீட்டிற்கு போவோம் என சொல்ல ஆனால் முல்லை எனக்கு குழந்தை பிறக்காது அதனால் நான் வேண்டாம் என சொல்கிறார். அதை கேட்டு கதிர் அதிர்ச்சி அடைய எனக்கு நீ தான் முக்கியம் என சொல்கிறார். என்னை பற்றி ஏன் நினைக்கவில்லை என பேசி வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
முல்லைக்கு அனைவரும் ஆறுதல் சொல்லி செயற்கை கருத்தரிப்பு செய்யலாம் என முடிவு செய்கின்றனர். இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவாகும் என்பதால் முல்லை கதிரை விட்டு விலக முடிவு செய்கிறார். கதிருக்கு வேற பெண்ணை பார்த்து திருமணம் செய்ய வேண்டும் என முடிவு செய்கிறார். அதற்கு கதிர் சம்மதிப்பாரா என்பது எல்லாம் அடுத்து வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதனால் ரசிகர்கள் வருத்தமாக இருந்தாலும் சீரியலில் சுவாரசியம் வரும் என்பதால் உற்சாகத்தில் இருக்கின்றனர்.