கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீர் திருப்பம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லைக்கு டிரீட்மென்ட் முடிந்து இன்று மருத்துவமனைக்கு சென்று இருக்கின்றனர். அவர்கள் இன்னும் 2 வாரங்களில் கர்ப்பம் உறுதியாகிவிடும் என சொல்கின்றனர். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் முல்லை கர்ப்பமாகிவிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பமே ஒற்றுமையாக இருந்து வரும் நிலையில் முல்லைக்கு குழந்தை இல்லை என்ற ஒரு குறை தான் அனைவரையும் வருத்தப்பட செய்கிறது. பல இடங்களில் கடன் வாங்கி முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்கின்றனர். முல்லை நடக்க கூடாது கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர் சொல்ல அனைவரும் அக்கறையாக கவனித்து கொள்கின்றனர். குடும்பமே தன்னை கவனித்து கொள்வதை நினைத்து முல்லை சந்தோசப்படுகிறார். பணம் அதிகமாக செல்வாவதை பார்த்து கதிர் வருத்தப்படுகிறார்.
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலை மிஸ் செய்யும் நடிகை ஆலியா மானசா – வைரலாகும் வீடியோ!
இன்றைய எபிசோடில் கயலையும் பாண்டியனையும் மீனா பாசத்துடன் கவனித்து சொல்ல ஐஸ்வர்யா கண்ணனும் அவருக்கு துணையாக இருக்கின்றனர். என்ன தான் சண்டை போட்டாலும் மீனாவும் ஐஸ்வர்யாவும் பாசமாக பழகி வருகின்றனர். அதை பார்க்கவே அழகாக இருக்கிறது. இந்நிலையில் முல்லை இன்று மருத்துவமனைக்கு போகிறார். அங்கே எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் முல்லையை டாக்டர் பரிசோதனை செய்கிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது முல்லைக்கு முதல் முயற்சிலேயே நல்ல பாசிட்டிவாக இருப்பதாக டாக்டர் சொல்கிறார். அதை நினைத்து முல்லை சந்தோசப்படுகிறார். இன்னும் 2 வாரங்களில் கர்ப்பம் உறுதியாகிவிடும் என டாக்டர் சொல்கிறார். குடும்பத்தில் அது பற்றி சொல்ல அனைவரும் சந்தோசமாக இருக்கின்றனர். இனி வர போகும் எபிசோடுகளில் முல்லைக்கு கர்ப்பம் உறுதியாக இருக்கிறது. அதனால் அனைவரும் சந்தோஷத்தில் இருக்க கதிர் பயங்கர சந்தோஷத்தில் இருக்க போகிறார்.