செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா? பயத்தில் நடுங்கும் முல்லை – சீரியலில் புதிய திருப்பம்!
முல்லைக்கு இந்த வாரத்தில் இருந்து செயற்கை முறை சிகிச்சை தொடங்க இருக்கிறது. இந்நிலையில், இந்த சிகிச்சை வெற்றி பெறுமா எனவும், தோல்வியடைத்துவிட்டால் மீண்டும் எப்படி 5 லட்சத்தை ரெடி செய்வது எனவும் முல்லை பயப்படுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. முல்லையால் இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என மருத்துவர் கூறியதை தொடர்ந்து செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து வேண்டுமானால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என குடும்பத்தினர்கள் முடிவு செய்துள்ளனர். செயற்கை முறை கருவுறுதலுக்கு 5 லட்சம் செலவாகும் என மருத்துவர் கூறிவிடுகிறார்.
கார் விபத்தில் சிக்கிக் கொண்ட ‘பாக்கியலட்சுமி’ ஜெனி – அவரே வெளியிட்ட பதிவு! நடந்தது என்ன?
இவ்வளவு பெரிய தொகைக்கு என்ன செய்வது என குடும்பத்தினர்கள் விழித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மூர்த்தி முல்லையின் சிகிச்சை முடியும் வரை வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என கூறி விடுகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த பிளானிற்கு ஒப்புக்கொண்டாலும் மீனாவிற்கு மட்டும் சுத்தமாக பிடிக்கவில்லை. அனைவருக்கும் சொந்தமான வீட்டை முல்லைக்காக நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி சண்டை போடுகிறார்.
ExamsDaily Mobile App Download
இதன் பின்பு, ஜீவாவும், மூர்த்தியும் சேர்ந்து 5 லட்சத்தை ரெடி செய்கிறார்கள். செயற்கை முறை சிகிச்சை சில சமயங்களில் தோல்வியில் கூட முடிய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை தோல்வியில் முடிந்தால் மீண்டும் 5 லட்சம் கட்ட வேண்டும். இதனால் செயற்கை முறை சிகிச்சை வெற்றி பெறுமா என குடும்பத்தில் உள்ள அனைவரும் பயத்தில் உள்ளனர். ஒரு வேளை, இந்த சிகிச்சை தோல்வியில் முடிந்தால் என்ன செய்வது என முல்லை பயப்படும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.