“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து விலகும் காவ்யா அறிவுமணி – முல்லையாக என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு குழந்தை இல்லாமல் தவித்து வர அதனால் குடும்பமே புது வீடு வேண்டாம் என தியாகம் செய்கின்றனர். இந்நிலையில் முல்லை கர்ப்பமாக இருப்பாரா என ட்விஸ்ட் உடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழ் சின்னத்திரை வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு குடும்ப சீரியல் இல்லை என சொல்லும் அளவிற்கு குடும்பக் கதையை மட்டுமே கதையாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் TRP பட்டியலில் இடம் பிடிக்கும் டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. அண்ணன் தம்பிகளின் பாசத்தையும் கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையையும் பற்றி இந்த கதை இருக்கிறது. தற்போது இந்த சீரியலில் முல்லை கதிரை சுற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது.
கதிரும் முல்லையும் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டாலும் தங்களுக்குள் இருக்கும் காதலை உணர்ந்து அழகாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருவரும் புரிந்து கொள்ளவே இத்தனை நாள் ஆன நிலையில் குழந்தையை பற்றி யோசிக்காமல் இருந்தனர். ஆனால் இப்போது குழந்தை வேண்டும் என ஆசைப்பட ஆனால் குழந்தை இல்லை. அதனால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய முல்லைக்கு குறை இருப்பது தெரிய வருகிறது. அதனால் முல்லை மனம் உடைந்து போக டிரீட்மென்ட் மூலம் குழந்தை பிறக்க வைக்கலாம் என டாக்டர் சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால் குடும்பமே புது வீடு வாங்க இருந்த திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு முல்லைக்கு டிரீட்மென்ட் பார்க்கின்றனர். அதன் மூலம் நல்ல ரிசல்ட் இருக்கிறது. இப்படி முல்லையை பற்றியே கதை சென்று கொண்டிருக்கும் அந்த பரபரப்பான சூழ்நிலையில் முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக நடிகை ஆலியா மானசா களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆலியா சீரியலில் இருந்து தற்போது இடைவெளி எடுத்துள்ள நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலமாக என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.