தமிழக கோவில்களில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி ஏற்பாடு – அறநிலையத்துறை ஏற்பாடு!
ஆடி மாதத்தில் பக்தர்கள் கோவிலுக்கு அதிகமாக வருவார்கள் என்பதால் தமிழகத்தில் உள்ள 27 பிரசித்தி பெற்ற கோவில்களில் கூடுதல் வசதி ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
கூடுதல் வசதி ஏற்பாடு:
தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த மாதம் முழுக்கவே பக்தர்கள் கோவிலுக்கு வந்து நேத்திக்கடன்களை செய்வது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 27 அம்மன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதாவது, ஆடி மாதம் முழுக்கவே பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, சென்னை மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், திருச்சி வெக்காளியம்மன் கோவில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தான் அந்த சிறப்பு ஏற்பாட்டினை செய்யவுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
திருப்பூரில் நாளை ( ஜூலை 13) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் அமைத்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் நேத்திக்கடன்களை முடித்து விட்டு சென்ற பிறகு கோவில் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும், பொங்கல் வைக்கும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் எனவும், கோவிலுக்குள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.