வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

நாட்டின் 75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு:

நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவமாக கொண்டாடும் ஒரு நிகழ்வு என்றால் அது சுதந்திர தின விழா தான். அதாவது, நாட்டின் சுதந்திர தின விழாவானது அனைத்து மக்களாலும் ஒருசேர கொண்டாடப்படும் அரசு பொது விழா ஆகும். இந்த தினம் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போது இந்த ஆண்டிற்கான சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.

Exams Daily Mobile App Download

இதையொட்டி, அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், கட்சி அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடும் நிகழ்வு நடைபெறும். அந்த வகையில் பள்ளி, கல்லூரிகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையுடன், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை இணைத்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 2) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு

  • அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா அன்று தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கப்பட வேண்டும்.
  • கொரோனா சூழ்நிலையை பொறுத்து, நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வழியாகவோ (விர்ச்சுவல் பார்மெட்) தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை ஏற்பாடு செய்யலாம்.
  • நேரடியாக நடக்கும் நிகழ்வில் அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர்கள் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.
  • தேசிய போர் நினைவிடம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் அது தொடர்பாக தகவல்களை அன்றைய தினம் மக்களிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுத்தலாம். இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பொதுவாக வெளியிடப்பட்டவை ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!