கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம்? போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!
தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி வேண்டும் என இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அந்த பகுதி முழுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளி விடுதியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் தான் காரணம் என பல போராட்டக்காரர்கள் பள்ளி வாகனம், வகுப்பறைகள் என பள்ளி உடைமை பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகம் முழுக்கவே பல இளைஞர்கள் மாணவியின் மரணத்திற்க்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தலாம் எனவும், 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலை பக்கங்களில் செய்தி பரவியது. இதனால், சென்னை மெரினா கடற்கரையில் மாணவியின் மரணத்திற்க்கு நீதி கேட்டு இளைஞர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்பதற்காக மெரினா கடற்கரை பகுதி முழுக்கவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம்? போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!
அதாவது, சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள காமராஜர் சாலை முழுவதும் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மெரினா கடற்கரைக்கு யார் கூட்டமாக வந்தாலும் அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே விடுவிக்கப்படுகிறார்கள். மேலும், இந்த போலீசார் பாதுகாப்பு பணி கள்ளக்குறிச்சி விவகாரம் முழுமையாக முடிவடையும் வரைக்கும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.