கொரோனா தடுப்பூசி செலுத்த இருப்பிடச் சான்று தேவையா? மத்திய அரசு விளக்கம்!
நாட்டில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்கள் தடுப்பூசி போட சிரமப்படுவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு இருப்பிட சான்றிதழ் கட்டாயமில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
மத்திய அரசின் விளக்கம்:
இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்கள், ஆங்கில அறிவு அற்றவர்கள், ஸ்மார்ட் போன் வசதி இல்லாதவர்கள் போன்ற எளிய மக்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் உள்ளதாக ஒரு சில ஊடகங்கள் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த செய்திகள் அனைத்தும் பொய்யான மற்றும் அடிப்படை உண்மைகள் அற்றவையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பான உண்மைகள்,
- கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கோவின் தளத்தில் முன்பதிவு செய்ய தேவையில்லை.
- தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு இருப்பிட சான்றிதழ் அவசியமில்லை.
- தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கு மொபைல் போன் வைத்திருக்க வேண்டும் என்று தேவையில்லை.
கோவின் தளத்தில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குஜராத்தி, ஒடியா, வங்காளம், அசாமி, குருமுகி (பஞ்சாபி) மற்றும் ஆங்கிலம் ஆகிய 12 மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பயனர்கள் தங்களுக்கு தெரிந்த மொழியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், இணையதள வசதி அல்லது ஸ்மார்ட் செல்பேசி அல்லது செல்பேசியே இல்லாதவர்கள் கூட அனைத்து அரசு தடுப்பூசி மையங்களுக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். இதுவரையிலும் 80% தடுப்பூசிகள் நேரடி முறையில் செலுத்தப்பட்டது ஆகும். இதற்கு அடிப்படை தகவல்கள் மட்டுமே கேட்கப்படுகிறது. ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை மருத்துவ மையங்களில் தலா 26,000 உட்பட 70% தடுப்பூசி மையங்கள், ஊரகப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.