தமிழக அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு அறிவிப்பு? தலைமை செயலாளர் விளக்கம்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உரிய நேரத்தில் வழங்காமல் இருப்பதாக சில குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தகுதியுள்ள ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
பதவி உயர்வு:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி உயர்வு, சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அனால், ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதில் சில முறைகேடுகள் ஏற்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்து வருகின்றன. அதாவது, ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் பணி உயர்வு வழங்காமல் லஞ்சம் வாங்குவதாக பொதுமக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். அதே போல அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு செயற்கையாகவே காலிப் பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வு வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், சிலர் பதவி உயர்வு பெற்ற பிறகும் கூட அதற்கான முழு வேலையை செய்யாமலேயே பணப்பலன்களை சிலர் பெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த குற்றசாட்டுகளை விசாரித்த தலைமைச்செயலாளர் இறையன்பு உயர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக சில உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.
ஆகஸ்ட் 7ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை மையம் எச்சரிக்கை
அதாவது, தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமலேயே ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் எனவும், ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு செயற்கை காலிப் பணியிடங்களை ஏற்படுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும், தற்காலிகமாக ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும், அரசு ஊழியர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்றவாறு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
அந்த இடத்தில் வேலை பார்ப்பது கடினம்.