பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீண்டும் குழப்பம் – கர்ப்பமான ஐஸ்வர்யா! ப்ரோமோ ரிலீஸ்!
முல்லைக்கு தற்போது செயற்கை முறை சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. முல்லை கர்ப்பமுறுவாரா என எதிர்பார்த்த சமயத்தில் ஐஸ்வர்யா கர்ப்பமாவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் தற்போது செயற்கை முறையில் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் செயற்கை முறை கருவுறுதலுக்கு குறைந்தது 5 லட்சம் வரைக்கும் குடும்பத்தினர்கள் செலவு செய்துள்ளனர். மேலும், 5 லட்சத்தை பிரட்ட குடும்பத்தினர்கள் வீடு கட்டும் பிளானை நிறுத்தியுள்ளனர் மற்றும் தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்குகிறார்கள்.
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்து துறை அமைச்சர் அதிரடி உத்தரவு!
இந்த வாரத்தில் இருந்து முல்லைக்கு செயற்கை முறை சிகிச்சை நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சிகிச்சை வெற்றி பெறுவது சந்தேகமே. ஒரு மாதத்திற்கு பிறகே வயிற்றில் குழந்தை தங்கியுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும். ஒரு வேளை சிகிச்சை தோல்வியடைந்துவிட்டால் மீண்டும் 5 லட்சம் கட்டி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவருமே பயத்தில் உள்ளனர். இதற்கு நடுவே முல்லைக்காக மட்டும் 5 லட்சம் செலவு செய்திருக்கிறார்கள் என மீனா கடுப்பில் இருக்கிறார். இதற்கு பிறகு கண்ணன் ஒரு முறை ஹோட்டலுக்கு ஐஸ்வர்யாவை அழைத்து சென்று நன்றாக சாப்பிடுகிறார்.
Exams Daily Mobile App Download
பின்பு, தான் தன்னிடம் காசு இல்லை என்பதை கண்ணன் உணருகிறார். பின்பு, ஜீவாவிற்கு கால் செய்து காசு அனுப்புமாறு கேட்கிறார். இதனால் ஐஸ்வர்யாவுக்கு கடுப்பாகுகிறது. முல்லைக்காக மட்டும் இவ்வளவு செலவு செய்கிறார்கள், கண்ணனிடம் சாப்பிட கூட காசு இல்லாமல் இருக்கிறார் என நினைக்கிறார். இந்நிலையில் திடீரென ஐஸ்வர்யாவிற்கு மயக்கம் வருவது போலவும், வாந்தி வருவது போலவும் உணருகிறார். ஒருவேளை கர்ப்பமாக இருப்போமோ என நினைக்கிறார். ஒரு வேளை கர்ப்பமாக இருந்தால் முல்லைக்கு எப்படி இருக்கும் என நினைக்கும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.