கோபி பற்றிய உண்மையை தெரிந்து கொண்டு பாக்கியாவிடம் கூறும் தனம் – மகா சங்கமம் ப்ரோமோ ரிலீஸ்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணைகின்றனர். இந்நிலையில், கோபியை பற்றிய உண்மையை தனம் தெரிந்துகொண்டு பாக்கியாவிடம் கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னை கண்ணும் கருத்துமாக கவனித்து கொள்ளும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்ய கோபி துடித்து கொண்டிருக்கிறார். எப்போது தான் பாக்கியா கோபியை பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கோபி என்ன தான் தவறு செய்தாலும் என் கணவர் என்னை தவிர யாரையும் பார்க்கவே மாட்டார் என கோபி மீது குருட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார்.
திருமணம் குறித்து மனம் திறந்த செம்பருத்தி சீரியல் ஷபானா – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்த நம்பிக்கை உடையும் போது கோபியிடம் பாக்கியா எப்படி நடந்துகொள்வார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கணவரின் விருப்பப்பத்திற்காக ராதிகாவுடன் கோபியை சேர்த்து வைப்பாரா அல்லது கோபிக்காக ராதிகாவுடன் சண்டை போட போகிறாரா என்பது தெரியவில்லை. தற்போது பாக்கியலட்சுமி குடும்பத்தினர்கள் ராமமூர்த்தி தாத்தாவின் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளனர். இதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் தற்போது பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணையவுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்த பிறந்தநாள் விழாவுக்காக ராதிகாவையும் பாக்கியா அழைத்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் உங்களது வருங்கால கணவரையும் கட்டாயமாக அழைத்துவர வேண்டும் என பாக்கியா கூறுகிறார். ராதிகா இந்த பிறந்தநாள் விழாவிற்கு வந்துவிட்டாலே கோபியை பற்றிய உண்மைகள் தெரிந்துவிடும். இதற்கு முன்பாகவே கோபியும் ராதிகாவும் சேர்ந்து இருப்பதை தனம் பார்த்துவிடுகிறார். எதற்காக கோபி அண்ணா ராதிகாவுடன் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்று ராதிகாவிற்கு சந்தேகம் வருகிறது. பின்பு, தனம் பாக்கியாவிடம் இது குறித்து கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.