பாக்கியாவின் கணவர் தான் கோபி, ராதிகாவிடம் உண்மையை கூறும் மீனா – ப்ரோமோ ரிலீஸ்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது கோபியுடன் ராதிகா இருப்பதை மீனா பார்த்துவிட்டு ராதிகாவிடம் கோபியை பற்றிய உண்மையை மீனா கூறும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கோபி தான் உலகம் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாக்கியாவை கோபி விவாகரத்து செய்ய பிளான் செய்து கொண்டிருக்கிறார். பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ள கோபி தயாராகி வருகிறார். பாக்கியாவும் ராதிகாவும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கூட ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்கிற விஷயம் மட்டும் வெளியே வராமல் இருக்கிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சூட்டிங் ஸ்பாட்டில் மீனா, ஐஸ்வர்யா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
இருவரும் நண்பர்களாக இருப்பதால் கூடிய விரைவில் உண்மை வெளியே வர வாய்ப்பிருக்கிறது. இதனால் இருவரையும் பிரித்தே தீர வேண்டும் என கோபி பிளான் போட்டு கொண்டிருக்கிறார். ராதிகாவை கோபி திருமணம் செய்துகொள்ள போகிற விஷயம் கோபியின் அப்பாவான ராமமூர்த்திக்கு தெரியும். கோபியை கண்டித்த போது பாக்கியாவை விவாகரத்து செய்துவிடுவேன் என மிரட்டியதால் பாக்கியாவின் வாழ்க்கையை நினைத்து பார்த்து கோபியை அப்படியே விட்டு விடுகிறார். அதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கோபி தவறு செய்து கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
தற்போது வரை அனைவரின் கண்ணிலும் மண்ணை தூவிவிட்டு ராதிகாவை சந்தித்து காதலை வளர்த்து வருகிறார். கோபி எப்போது தான் மாட்டுவார் என எதிர்பார்த்த சமயத்தில் ராமமூர்த்தி தாத்தாவின் 75 ஆவது பிறந்தநாளை கொண்டாட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் அனைவரும் பாக்கியலட்சுமி குடும்பத்துடன் இணையவுள்ளனர். அப்போது கோபியுடன் ராதிகா இருப்பதை மீனா பார்த்துவிடுகிறார். பாக்கியாவின் கணவர் உங்களுக்கு எப்படி தெரியும் என ராதிகாவிடம் மீனா உண்மையை போட்டுடைக்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.