ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து அசத்தும் பாக்கியா – மகிழ்ச்சியில் எழில்! ப்ரோமோ ரிலீஸ்!

0
ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து அசத்தும் பாக்கியா - மகிழ்ச்சியில் எழில்! ப்ரோமோ ரிலீஸ்!
ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து அசத்தும் பாக்கியா - மகிழ்ச்சியில் எழில்! ப்ரோமோ ரிலீஸ்!
ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து அசத்தும் பாக்கியா – மகிழ்ச்சியில் எழில்! ப்ரோமோ ரிலீஸ்!

தற்போது ஒரு சமையல் போட்டியில் பாக்கியா கலந்து கொள்கிறார். அதாவது ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை செய்து அசத்த வேண்டும். இந்த போட்டியிலும் பாக்கியா தான் வெற்றி பெறும்படியாகவும், அவருக்கு துணையாக எழில் நிற்கும்படியாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னதான் படிக்காத பெண்ணாக இருந்தாலும் சமையல் கலையில் பாக்கியாவை அடித்துக் கொள்ளவே முடியாது. தனக்கு தெரிந்ததை வைத்து ஒரு தொழிலைத் தொடங்கலாம் என கேட்டரிங் தொழிலை தொடங்கி இருக்கிறார். ஆனால் பாக்கியா இப்படி தனியாக தொழில் தொடங்கியது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லை. ஆனாலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் வற்புறுத்தியதால் கோபியும் ஒப்புக்கொண்டார். தற்போது கேட்டரிங் தொழில் மிகவும் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது.

மனைவி ஷ்ரேயாவின் காலை உடைத்த ‘ராஜா ராணி 2’ சரவணன் – அலறும் நடிகை! – வைரலாகும் வீடியோ!

பாக்கியாவும், ராதிகாவும் சிறந்த நண்பர்களாக இருப்பதால் எப்படியும் தன்னை பற்றிய உண்மைகளை இருவரும் தெரிந்து கொள்ள போகிறார்கள் என இருவரையும் பிரிக்க திட்டம் போடுகிறார். இதற்கு இடையே மயூவின் பிறந்தநாளுக்காக சமைக்க சொல்லி ராதிகா பாக்கியாவிடம் ஆர்டர் கொடுத்திருப்பார். அப்போது பாக்கியா சமைத்துக் கொடுத்த சாப்பாட்டில் கோபி ஏதோ ஒன்றை கலந்து விடுகிறார். சாப்பாட்டை சாப்பிட்ட அனைத்து குழந்தைகளும் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் போலீசார் பாக்கியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Exams Daily Mobile App Download

இதற்குப் பிறகு பாக்கியா மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபித்து எழில் தான் வெளியே அழைத்து வருகிறார். பின்பு மீண்டும் கேட்டரிங் தொழில் செய்ய வேண்டாமென கோபி பாக்கியாவிடம் கூறிவிடுகிறார். பின்பு ராதிகாவுக்காக தொழில் தொடங்கும்படி கூறுகிறார். தற்போது ஒரு சமையல் போட்டியில் பாக்கியா பங்கேற்ற இருக்கிறார். அதாவது ஒரு மணி நேரத்தில் 100 உணவுகளை சமைத்து அசத்த வேண்டும். வழக்கம்போல பாக்கியா தான் இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுகிறார். பாக்கியா இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போதும் எழில் தான் பாக்கியாவிற்கு துணையாக இருக்கிறார். தற்போது அனைவரும் பாக்கியாவின் சாதனையை நினைத்து கைத்தட்டி வாழ்த்தும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!