ராதிகாவை நேரில் சந்தித்து கண்டபடி திட்டிய பாக்கியா – சீரியலில் அடுத்த திருப்பம்! வைரலாகும் ப்ரோமோ!
குடிபோதையில் கோபி உளறியதை கேட்டதும் கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. அதுவும் ராதிகா தான் என்பதை அறிந்து கொண்டு ராதிகாவின் வீட்டிற்கே சென்று கண்டபடி ராதிகாவை திட்டும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகா அறிந்துகொள்கிறார். பிறகு பாக்கியாவிற்காக கோபியை ராதிகா விட்டு கொடுப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். கோபியின் மீது ராதிகாவிற்கு சந்தேகம் வந்ததுமே என்னை இப்பொழுதே உங்களது வீட்டிற்கு கூட்டிச் செல்லுங்கள் அல்லது உங்களது குடும்பத்தினரின் புகைப்படத்தை எனக்கு காட்டுங்கள் என அவ்வப்போது ராதிகா சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
பிக் பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பம் – வனிதாவையே மிஞ்சும் அளவிற்கு முக்கிய போட்டியாளர் தேர்வு!
இதனால் மாட்டிக் கொள்ளப் போகிறோம் என பயந்து நன்றாக குடித்துவிட்டு ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போதும் ராதிகா என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள் என சண்டை போடுகிறார். இதனால் குடி போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபியும் பாக்கியாவும் இருக்கும் புகைப்படத்தை எடுத்து ராதிகாவிடம் காட்டுகிறார். பாக்கியா டீச்சரின் கணவரை தான் இத்தனை நாட்களாக நான் காதலித்துக் கொண்டிருந்தேனா என ராதிகா கதறி அழுகிறார். பின்பு போதையில் தள்ளாடியபடியே பாக்கியாவின் வீட்டிற்கு சென்று அங்கேயும் போதையில் உளறுகிறார்.
Exams Daily Mobile App Download
அதாவது உனக்காகத்தானே எனது குடும்பத்தினரை விட்டு வர தயாராக இருந்தேன். எனக்கு நீங்கள் இருவரும் முக்கியம் என உளறுகிறார். இதனால் பாக்கியாவிற்கும் கோபிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. இதன் பின்பு போதை தெளிந்து பழையபடி ராதிகாவை சந்திக்க கோபி வருகிறார். போதையில் பேசியது எதுவுமே கோபிக்கு ஞாபகம் இல்லை. கோபி மறுபடியும் வீட்டிற்கு வந்ததும் ராதிகா மிகவும் கோபப்படுகிறார். எதற்காக இங்கு வந்தீர்கள் வெளியே செல்லுங்கள் என கண்டபடி பேசி அனுப்புகிறார். இதன்பின்பு பாக்கியாவிற்கு ராதிகாவை தான் கோபி காதலித்தார் என்கிற விஷயம் தெரிய வருகிறது. உடனே ராதிகாவின் வீட்டிற்கு பாக்கியா வந்து உன்னை நம்பித்தானே எனது வீட்டிற்குள் உன்னை அனுமதித்தேன். நீ இவ்வாறு எனக்கு துரோகம் செய்து விட்டாய் என பாக்கியா ராதிகாவிடம் கண்டபடி பேசும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.