ஜூலை 1 முதல் ‘இதற்கு’ தடை – மத்திய அரசு அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் எந்த விதமான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்த கூடாது என மத்திய அரசு தடை நிர்வகித்துள்ளது. மேலும் எந்தெந்த பொருட்களை தடை செய்துள்ளது என்பதை குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பிளாஸ்டிக் பொருட்கள்:
பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் நிலம், நீர், காற்று மாசடைவது மட்டுமின்றி பிளாஸ்டிக் பைகளில் உணவுகளை வாங்கி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள், விலங்குகளுக்கு தீமை விளைவிப்பது, சுற்று சூழக்கு தீமை விளைவிப்பது, கடல் மற்றும் கடல் சார் பகுதிகளை அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்புகளில் இருந்து பிளாஸ்டிக் பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டது. எவ்வளவு தான் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்று தடைகள் விதிக்கப்பட்டாலும் மறைமுகமாக இதை மக்கள் பயன்படுத்துகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனால் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் எக்ஸ்பேன்டட் பாலிஸ்டிரீன் மற்றும் பாலிஸ்டிரீன் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைக்கு மத்திய அரசு தடை அமல் படுத்தி உள்ளது. இந்த பிளாஸ்டிக்கை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். அதனால் இந்த பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதும் கடினமான ஒன்று. அதுவும் இது பெட்ரோலியம் சார்ந்தவை மட்டுமின்றி இது எரியும் தன்மை கொண்டதால் இயற்கை சார்ந்த அனைத்து பிரிவுகளுக்கும் அதிகம் தீமை விளைவிக்கும் என்பதால் தடை விதித்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான புதிய அறிவிப்புகள் – அரசு வெளியீடு!
அப்படிப்பட்ட இந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை வழங்க வேண்டாம் என்று தேசிய, மாநில மற்றும் உள்ளூர் மாவட்டங்களுக்கு உத்தரவுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது குறித்த தகவல் தெரியவந்தால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் கீழ் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.