வங்கியில் பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை – அரசின் அதிரடி உத்தரவு!
சீனாவில் 1989-ம் ஆண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் திரளாக திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதனை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். இதையடுத்து ராணுவத்தினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக, பொதுமக்கள் அதிர்ச்சி அடையும் அளவுக்கு தற்போது சீனாவில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
பணம் எடுக்க பொதுமக்களுக்கு தடை:
வங்கிகள் நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாகும். வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில் சீனாவின் ஹெனான் பகுதியில் பேங்க் ஆப் சீனாவின் கிளையில், வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் இருந்து பணத்தை எடுக்க பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் வங்கி வாடிக்கையாளர்கள் யாரையும் பணத்தை எடுக்க வங்கி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
Exams Daily Mobile App Download
இதனால் பணத்தை எடுக்க முடியாமல் தவிக்கும் வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க குவிந்தனர். இதனால் ஏ.டி.எம். மையங்களில் திரளான கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதை முன்பே அறிந்து, அவர்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்களை மிரட்டும் வகையில் சீன ராணுவம் தெருக்களில் பீரங்கிகளை நிறுத்தி உள்ளது. இவை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை,முதலீட்டாளர்களிடம் இருந்து வங்கியை காக்கும் வகையில் சீன அரசு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சற்றுமுன் TNPSCயில் வந்த வேலைவாய்ப்பு – ரூ.56100 முதல் சம்பளம் !
மேலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக சேமிப்பு பணத்தை திரும்ப ஒப்படைக்கும் பணி நடந்து வருவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கடந்த 1989ம் ஆண்டு சீனாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் திரளாக திரண்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இறந்தனர். சீனா வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. இதே போல தற்போது நெருக்கடியில் சிக்கியுள்ள அரசு வங்கிகளை காப்பதற்காக சீன அரசு பீரங்கிகளை நிறுத்தி இருப்பது 1989-ம் ஆண்டு நடந்த பீரங்கி தாக்குதலை நினைவு படுத்துவதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.