இந்தியாவில் வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை – மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அரசாணை!
இந்தியாவில் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்லக்கூடாது என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்ப்போம்.
வெளிநாட்டு வாகனங்கள்
இந்தியாவில் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து தற்போது மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் இதற்காக பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும் சாலை விதிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேசிய பென்ஷன் திட்டத்தில் புதிய மாற்றம் – முழு விவரங்கள் இதோ!
இந்த நிலையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இது தொடர்பாக அறிவிப்பானை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களில் இந்திய மக்களையோ அல்லது சரக்குகளையோ ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கட்டாயமான முறையில் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் பதிவு மேற்கொள்ளப்பட்ட வாகனங்கள் தங்களுக்குரிய ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி, உரிய காப்பீட்டு பாலிசி, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் கண்டிப்பான முறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆவணங்களில் ஆங்கில மொழித் தவிர பிற மொழிகளில் இருப்பின் அவற்றை ஆங்கில மொழியில் மொழிமாற்றம் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்