தமிழகத்தில் பேருந்துகளில் செல்போன் உபயோகிக்க தடை – அரசு அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் பேருந்துகளில் செல்போன் உபயோகிக்க தடை - அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் பேருந்துகளில் செல்போன் உபயோகிக்க தடை - அரசு அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் பேருந்துகளில் செல்போன் உபயோகிக்க தடை – அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் பதவி ஏற்றுள்ள திமுக ஆட்சி, அனைத்து துறைகளிலும் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் போக்குவரத்துத் துறையிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது பேருந்து நடத்துனர் பணியில் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.

அரசு அதிரடி உத்தரவு:

தமிழக அரசு தற்போது பேருந்து பயணம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நெடுஞ்சாலையோரம் உள்ள உணவகங்களை கட்டுப்படுத்தியுள்ளது. மேலும், அங்கு அவ்வப்போது ஆய்வு நடக்கிறது. மேலும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் அவ்வப்போது உத்தரவுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சில காலமாக சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. மேலும் பேருந்துகளில் பெரும்பாலான நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போன் பார்ப்பதாகவும் உறங்குவதாகவும் பயணிகள் தரப்பில் அடிக்கடி புகார் எழுந்தது. இதனால் பயணச்சீட்டு வழங்கும் போது சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த புகாரின் அடிப்படையில் தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் பேருந்து ஓட்டுனர்கள் பணியில் இருக்கும் போது தொலைபேசி பயன்படுத்துவதாலும், நடத்துனர்கள் பகலில் பணியில் முன் இருக்கையில் ஓட்டுநருடன் உரையாடிக் கொண்டு அமர்ந்து செல்வதால், ஓட்டுனருக்கு கவனக்குறைவு ஏற்பட்டு அதிக விபத்துகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாதிரியான கவன குறைவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க தமிழக போக்குவரத்துத் துறை தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – விரைவில் WiFi சேவை அறிமுகம்!

இது தொடர்பாக போக்குவரத்து கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பேருந்துகளில் நடத்துனர் பணி நேரத்தின்போது செல்போன்களில் நிகழ்வுகளைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்தின் 2 படிக்கட்டுகளும் பார்வையில் இருக்கும்படி நடத்துனர்கள் கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பணி நேரத்தில் நடத்துனர் பகலில் முன் இருக்கையில் அமர்ந்து இருப்பது கண்டறியப்பட்டால் சட்ட பிரிவின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!