இந்தியாவில் டிவி விலை 3 – 4 சதவீதம் உயர்வு – தயாரிப்பாளர்கள் அறிவிப்பு!
இந்தியாவில் நடப்பு மாதத்தில் தொலைக்காட்சியின் விலை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைக்காட்சி விலை உயர்வு:
இந்தியாவில் தொலைக்காட்சி பொழுதுபோக்கு சாதனங்களில் ஒன்றாக உள்ளது. தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை, அனைத்து நிறுவனங்கள் , அலுவலகங்களிலும் கூட தொலைக்காட்சி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் தேவைக்கேற்பவும், வசதிக்கேற்பவும் விரும்பிய அளவுள்ள தொலைக்காட்சிகளை வாங்குகின்றனர். தற்போது LED போன்ற ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி முதல் நகர பேருந்துகள் இயக்கம் – அரசு திட்டம்!
இதன் விலையை தற்போது உயர்த்த தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளனர். அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உயர்வால் வெளிநாடுகளில் இருந்தது வரும் தொலைக்காட்சியின் உதிரி பாகங்கள் விலை அதிகரித்துள்ளது என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். தொலைக்காட்சியின் பேனல்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில், கடல் வழி போக்குவரத்து மற்றும் உள்நாட்டு போக்குவரத்துக்கான செலவு அதிகரித்ததால் தொலைக்காட்சிகளின் விலை உயர்த்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதனை தொடர்ந்து தற்போது டிவி பேனல்கள் விலை மிகவும் அதிகரித்து விட்டதால் நடப்பு மாதத்தில் தொலைக்காட்சியின் விலை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கும் என தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பேனல், ஒரு டிவி தயாரிப்பில், 70 சதவீத பங்கு வகிக்கிறது. எனவே அதிகம் விற்பனை ஆகும், 32 அங்குலம் மற்றும் 42 அங்குல ‘டிவி’களுக்கான பேனல் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என ஹேயர் அப்ளையன்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது எனவும் கூறியுள்ளார்.