நாடு முழுவதும் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் – முக்கிய உத்தரவு வெளியீடு!

0
நாடு முழுவதும் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் - முக்கிய உத்தரவு வெளியீடு!
நாடு முழுவதும் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் – முக்கிய உத்தரவு வெளியீடு!

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் செய்து நாட்டின் இடைக்கால அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவசரநிலை பிரகடனம்:

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் மாலத்தீவு தப்பிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கொழும்பு பிரதமர் அலுவலகம் உள்ள பகுதியில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த 100 க்கும் மேற்பட்ட ராணுவ மற்றும் அதிரடிப்படை வீரர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும், அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் இன்று (ஜூலை 18) முதல் மீண்டும் காலவரையற்ற அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க ஏற்பாடு – அமைச்சர் விளக்கம்! தற்கொலை விவகார வழக்கு!

அரசுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். போராட்டத்தால் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை பிரதமர் இல்லத்திற்கு பலத்த ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் இந்த அவசர நிலையை ரணில் விக்ரமசிங்கே பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!