நாட்டில் அதிரடியாக அவசர நிலை பிரகடனம் – குரங்கு அம்மை நோய் பரவல் எதிரொலி!

0
நாட்டில் அதிரடியாக அவசர நிலை பிரகடனம் - குரங்கு அம்மை நோய் பரவல் எதிரொலி!
நாட்டில் அதிரடியாக அவசர நிலை பிரகடனம் - குரங்கு அம்மை நோய் பரவல் எதிரொலி!
நாட்டில் அதிரடியாக அவசர நிலை பிரகடனம் – குரங்கு அம்மை நோய் பரவல் எதிரொலி!

உலக அளவில் அச்சுறுத்தும் ஒன்றாக உருவெடுத்து வரும் குரங்கு அம்மை நோய் தற்போது வேகமெடுத்து கண்டம் விட்டு கண்டம் பரவி வருகிறது. இவ்வாறு நோய் பரவல் தீவிரத்தின் எதிரொலியாக மக்கள் தரப்பில் இருந்து அரசு நிர்வாகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை தீவிரம்:

உலகையே புரட்டி எடுத்த கொரோனா பெருந்தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருக்கும் சூழலில், குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கை இப்போது அதிகளவு அச்சத்தை உண்டாக்கும் விதமாக வரத் தொடங்கி உள்ளது. குரங்கில் இருந்து கண்டறியப்பட்ட இந்த நோய் முதன் முதலில் ஐரோப்பாவில் தான் பரவத் தொடங்கியது. அதன் பிறகு பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு கண்டம் விட்டு கண்டம் பரவத் தொடங்கி இருக்கும் இந்த குரங்கு அம்மை தற்போது 70 சதவிகிதம் ஐரோப்பாவிலும், 25 சதவிகிதம் அமெரிக்காவிலும் தீவிரமடைந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதுவரை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்து பாதிப்பின் எதிரொலியாக 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. குறிப்பாக கலிபோர்னியா மாகாணத்தில் 800 பேர் குரங்கு அம்மை வைரசால் சமீபத்தில் பாதிக்கப்பட்டிருப்பது அங்குள்ளவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சான் பிரான்சிஸ்கோ நகரத்திலும் கூட 261 பேருக்கு இந்த குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

அதனால், சான் பிரான்சிஸ்கோ நகர அரசு, தீவிரம் எடுத்துள்ள குரங்கு அம்மையை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கலிபோர்னியாவில் குரங்கு அம்மை அதிகளவு பரவி வரும் நிலையில், போதுமான தடுப்பூசிகளை பிடன் அரசு விநியோகிக்கவில்லை என்றும் சான் பிரான்சிஸ்கோ நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. அதாவது, மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கும்போது 70,000 குரங்கு அம்மை தடுப்பூசிகள் தேவைப்படும். ஆனால் பிடன் அரசு நிர்வாகம் 12,000 தடுப்பூசிகளை மட்டுமே விநியோகித்து இருப்பதாக மாகாண ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!