ரயிலில் இரு சக்கர வாகனத்தை பேக் செய்து அனுப்புவது எப்படி? முழு விவரங்கள் இதோ!
ரயிலில் இரு சக்கர வாகனங்களை பார்சல் மூலம் நீங்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பலாம். அத்துடன் இது மற்ற வழிமுறைகளை விட மிகவும் குறைவான விலையில் செய்ய முடியும். தற்போது இதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரயிலில் பைக் அனுப்புதல்:
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். அத்துடன் பொதுமக்கள் தங்களின் இருப்பிடம், அலுவலகம், சுற்றுலா உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் ரயிலில் பயணம் செய்கின்றனர். இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ரயிலில் எந்தவொரு பொருட்களையும் கொரியர் செய்து அனுப்ப வசதிகள் உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்கம்!
இதில் குறிப்பாக நீங்கள் வெளி மாநிலத்திற்க்கோ அல்லது வெளி ஊர்களுக்கோ உங்களின் இரு சக்கர வாகனங்களை கொண்டு செல்ல வேண்டுமென்று நினைத்தால் அதற்கு சிறப்பான வழி ரயில் போக்குவரத்தாகும். அதாவது உங்களின் இரு சக்கர வாகனத்தை பேக் செய்து விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க முடியும். அத்துடன் இரு சக்கர வாகனத்தை பார்சல் மூலம் வேறு ஊர்களுக்கு அனுப்ப அடையாள அட்டை – ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மேலும் இரு சக்கர வாகனத்தை அனுப்புவதற்கு முன்பாக பெட்ரோல் டேங்க் சரிபார்க்கப்படும். ஏனெனில் பெட்ரோல் நிரப்பப்படமால் பைக்கை அனுப்ப வேண்டும். அத்துடன் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு அபராதம் வசூலிக்கப்படும். இதையடுத்து அனுப்ப வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்பாக பதிவு செய்ய வேண்டும். அத்துடன் இரு சக்கர வாகனத்தை நன்கு பேக் செய்து அனுப்ப வேண்டும். இந்த பேக்கிங்க்கு 300 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படும். இதனை தொடர்ந்து ரயிலில் இரு சக்கர வாகனத்தை அனுப்புவதற்கு சுமார் 1200 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.