Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.100 இருந்தால் எளிதாக கணக்கு தொடங்கலாம்!
இந்திய அஞ்சல்துறையில் உள்ள சேமிப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம். தற்போது அஞ்சலகத்தில் கணக்கு தொடங்க வேண்டும் என்று நினைப்பர்வர்களுக்கு இந்த பதிவு மிக பயனுள்ளதாக இருக்கும்.
சேமிப்பு கணக்குகள்:
இந்திய அஞ்சல் துறையில் சாமானியர்கள் முதல் அனைவரும் பயன்பெறும் வகையில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. அஞ்சல் நிலைய சேமிப்பு கணக்குகள் மக்களிடம் நம்பக தன்மையை பெற்றுள்ளது. அஞ்சலங்கள் வங்கிகளை போன்று அதிக வட்டி விகிதங்களை அளிக்கிறது. ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. பெரும்பாலான மக்கள் அஞ்சலக சேமிப்பில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக திட்டங்கள் பாதுகாப்பான முதலீடாகும்.
PF பென்ஷன் தொகை உயர்வு – ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
அஞ்சலகத்தில் கணக்கு தொடங்க நினைப்பவர்கள் கையில் 100 ரூபாய் இருந்தாலே போதும் எளிதாக கணக்கு தொடங்கலாம். செல்வ மகள் சேமிப்பு திட்டம், காப்பீடு திட்டங்கள், வருங்கால வைப்பு நிதி, கிராம சுரக்க்ஷா யோஜனா,மாதாந்திர வருமானத் திட்டம், முதியோருக்கான சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரிதி யோஜனா போன்ற திட்டங்கள் உள்ளது. தேசிய சேமிப்பு தொடர் வைப்பு நிதி திட்டத்தில் சேர நினைப்பவர்கள் 100 இருந்தால் போது எளிதாக கணக்கு தொடங்கலாம். பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ரூ.500 செலுத்தி கணக்கை தொடங்கலாம்.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2ம் பருவ தேர்வு குறித்த தகவல்கள்!
அடுத்ததாக பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ. 250 குறைந்தபட்ச தொகையை கொண்டு கணக்கு தொடங்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் சேர ரூ.1000 தேவை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் குறைந்தபட்ச தொகை ரூ.1000 வரை முதலீடு செய்யலாம். அடுத்ததாக கடைசியாக கிசான் விகாஸ் பத்திரம் இதில் ரூ.1000 இருந்தாலே போதும் கணக்கை தொடங்க முடியும்.
Without any doubt, the investment with POSTAL Department is giving much benefits than any other Savings scheme with any Bank. But, withdrawal procedure is TOO difficult one in attaining the final fruit. This withdrawal procedure should be made easier to attain the MATURED FRUIT.