TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – எவ்வாறு படிக்க வேண்டும்? முழு விவரம் இதோ!
தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றது. இந்நிலையில் வருகிற ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வுக்கு எப்படி தயாராகுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு குரூப் 2, குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியானது. குரூப் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
1 முதல் 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு!
இதற்கு லட்சக்கணக்கில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் ஜூலை 24 ஆம் தேதி தமிழகத்தில் பல மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு தேர்வு நடைபெறாமல் இருந்ததால் இந்த ஆண்டு 7382 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. இந்த தேர்வு எழுத 10 ஆம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும் என்பதால் பலர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் தேர்வர்களுக்கு மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழை தேர்வர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். குரூப் 4 பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து அதற்கு ஏற்றார் போல படிக்க வேண்டும். இதில் எழுத்து தேர்வு அடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்படும். எழுத்து தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும், முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு ஆகும். அதில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.
அதற்கு அடுத்து பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான பாடத்திட்டம், பழைய பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
மொழிப்பாடம்
தமிழ் மொழிப்பாடப்பிரிவில், தமிழ் இலக்கணம், இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய தலைப்புகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
பொது அறிவு:
பொது அறிவு 100 வினாக்களுக்கு கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு வினாக்கள் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் இருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) இருக்கும்.
தேர்வுக்கு என்ன படிப்பது?
குரூப் 4 தேர்வுக்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் படிக்க வேண்டும். தமிழ் மொழிப்பாடத்திற்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்க வேண்டும். மற்றும் 10 ஆம் வகுப்பு தமிழ் புத்தகங்களையும், தேவைப்பட்டால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களையும் படிக்க வேண்டும். அதன் பின் 6,7,8 தமிழ் புத்தகங்களையும் சேர்த்து படிக்க வேண்டும். குறிப்பாக செய்யுள், உரைநடை, இலக்கணம் ஆகியவற்றை படிக்க வேண்டும். படிக்கும் போது இலக்கணங்களை சேர்த்து படிக்க வேண்டும். மேலும் செய்யுள் பாடல்களை படிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
செய்யுள் படிக்கும்போது, நூற்குறிப்பு, நூலாசிரியர் குறிப்பு, நூலாசிரியர் எழுதிய பிற நூல்கள், காலம் போன்ற அனைத்து தகவல்களையும் படிக்க வேண்டும். கணித பாடங்களை ஒவ்வொரு நாளாக ஒரு பகுதி என படிக்க வேண்டும். தமிழ் மற்றும் கணித பகுதிக்கு முக்கியமாக முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படிப்பது அவசியம் ஆகும். பொதுஅறிவு கேள்விகள் 10 கேள்விகள் வரை வெளியில் இருந்து கேட்கப்படும். அவை நடப்பு நிகழ்வுகளை சார்ந்து இருக்கும்.
பள்ளி பாடப்புத்தகங்களை முழுமையாக படித்தாலே 75 வினாக்களில் 65 வினாக்களுக்கு பதில் அளிக்க முடியும் அறிவியல், வரலாறு, புவியியல், அரசியலமைப்பு உள்ளிட்ட பாடங்களுக்கு பாடப்புத்தகத்தை படிக்கும் போது, பெட்டிச் செய்தி, அடைப்புகுறிக்குள் உள்ள தகவல்கள், ஹைலைட் செய்யப்பட்ட தகவல்களை முக்கியமாக படிக்க வேண்டும்.