PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

0
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) சேமிப்பில் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் ஆன்லைனில் தங்கள் PF இருப்பை எளிதாகவும் தடையின்றியும் திரும்ப பெறலாம். இதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

PF கணக்கு

பொதுவாக, மாத ஊதியம் பெறும் ஒவ்வொரு ஊழியர்களும் தங்களது அடிப்படை சம்பளத்தில் 12% பணத்தை EPF கணக்கில் வரவு வைக்க வேண்டும். இந்த பணம் அந்த ஊழியர்களின் ஓய்வு காலத்தில் பெரிய பலன் அளிக்கிறது. இது தவிர இந்த PF கணக்குதாரர்கள் அரசு தரும் பல சலுகைகளையும் பெறுகின்றனர். இப்போது ஒரு உறுப்பினர் தனது வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் சேமிப்புகளை குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ், முன்கூட்டியே முழுமையாக திரும்ப பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான அனுமதியை EPFO வழங்குகிறது.

திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு முக்கிய அறிவிப்பு – ஏப்ரல் மாத நிகழ்வுகள்!

அதற்காக பயனர்கள் EPFO இன் உறுப்பினர் e-SEWA போர்ட்டலை பயன்படுத்த வேண்டும். அந்த வகையில் OPF லிருந்து பணத்தை எடுக்க, ஆதார் அட்டை UAN உடன் இணைக்கப்பட வேண்டும். இதனை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இணைய பக்கம் அல்லது UMANG செயலியை பயன்படுத்தி இணையத்தில் இணைக்கலாம். மேலும் KYCக்கு பான் கார்டைப் பயன்படுத்த வேண்டும். தவிர ஒரு ஊழியர், வேலையின் முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் PF நிதியை திரும்பப் பெறுவதை அரசாங்கம் அவசியமாக்கியுள்ளது. அந்த வகையில் வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கான செயல்முறைகளின் படி,

  • முதலாவதாக unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற யுஏஎன் போர்ட்டலை திறக்கவும்.
  • உங்கள் UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவைப் பயன்படுத்தி e-Sewa போர்ட்டலில் உள்நுழையவும்.
  • அங்கு “ஆன்லைன் சேவைகள்” என்பதைக் கிளிக் செய்து, “கிளைம்” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  • அடுத்த திரையில், உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை உள்ளிடவும்.
  • விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
  • பிரேக் “ஆன்லைன் உரிமைகோரலுக்குச் செல்லவும்” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • பணி உரிமைகோரல் படிவத்தில், கீழ்தோன்றும் பெட்டியிலிருந்து திரும்பப் பெறுவதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
  • மீண்டும், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
  • OTPக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கவும்.
  • OTP ஐ உள்ளிடவும்.
  • இப்போது கோரிக்கை விண்ணப்பம் சமர்ப்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!