தமிழகத்தில் 15 நாட்களில் ஆன்லைன் வழியாக ரேஷன் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது மிக எளிதான வேலையாகி விட்டது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் எங்கும் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான வழிமுறைகள் தேவையான ஆவணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரேஷன் கார்டு:
இந்தியாவில் மாநில அரசுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலையின் போது ஊரடங்கு மாதங்களில் நிவாரண தொகைகள், இலவச மளிகை பொருட்கள் போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 வகை பொருட்கள் கொண்ட பரிசுத்தொகுப்பும் வழங்கப்பட்டது.
வெளிநாடுகளில் பணியாற்ற விரும்பும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போதைய காலகட்டத்தில் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல இடங்களில் ரேஷன் கார்டு இருப்பிட சான்றாகவும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும்.
நீண்ட நேரம் வரிசையில் காத்து கிடந்து விண்ணப்பிக்க வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தபடியே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரேஷன் கார்டு வேண்டுபவர்கள் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறைகள்:
- முதலில் https://www.tnpds.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- ஸ்மார்ட் கார்டு ஆப்ஷன் என்பதை கிளிக் செய்து அதில் வரும் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்.
- படிவத்துடன் ஆதார் அட்டை, மின் ரசீது, பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ், வங்கி பாஸ்புக், சாதி சான்றிதழ் போன்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Exams Daily Mobile App Download
- அடுத்ததாக குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் எத்தனை உள்ளது போன்ற தகவல்களை வழங்க வேண்டும்.
- இறுதியாக விண்ணப்பம் சரிபார்ப்பு செய்து பிறகு 15 நாட்களுக்குள் நீங்கள் ரேஷன் கார்டை பெறலாம்.