இலவசமாக PAN CARD பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் எந்த ஆவணமும் இல்லாமல் ஆன்லைன் மூலம் இலவசமாக பான் கார்டு பெறும் வழிமுறைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
பான் கார்டு :
இந்தியாவில் பான் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் என்பதே பான் கார்டு ஆகும். தற்போது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணபரிவர்த்தனைகளின் போதும் பான் கார்டு அவசியமாகிறது. பான் கார்டுகளை வருமான வரித்துறையினர் விநியோகித்து வருகின்றனர். இந்த பான் கார்டு 10 இலக்க எண் கொண்டதாகும். வரி ஏய்ப்பை தடுக்கவும், கடன் மோசடிகளை குறைக்கவும் பான் கார்டு உதவுகிறது.
பிரபல காமெடி நடிகர் சூரி வீட்டு நிகழ்ச்சியில் நகை திருட்டு – போலீஸ் விசாரணையில் ஒருவர் கைது!
கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வாங்குவதற்கு, வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கு பான் கார்டு உதவுகிறது. தற்போது பான் கார்டை இலவசமாக பெற முடியும். ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பான் கார்டை பெற முடியும். எளிதாக ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தபடியே பான் கார்டு பெறலாம். இலவசமாக பான் கார்டு பெற எளிய வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
பான் கார்டு பெறும் வழிமுறைகள் :
- முதலில் Incometaxindiaefiling.Gov.In என்ற இனைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ‘Instant PAN’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர் ‘Get new E-PAN’-ஐக் கிளிக் செய்யவும்.
- அதில் உங்கள் ஆதார் எண்ணை பதிவிட்டு செக் பாக்ஸில் சரிபார்க்கவும்.
- அடுத்ததாக வருமான வரித்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
- இவற்றுக்கான உறுதிப்பாட்டை நீங்கள் அளித்த பிறகு, பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதை உள்ளிட்ட உடன், 15 இலக்க ஒப்புதல் எண் உருவாக்கப்படும்.
- பான் நகல் உருவாக்கப்பட்ட பிறகு ஆதார் இணைக்கப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.