தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – அப்ரூவல் வாங்குவது எப்படி?
இந்தியா முழுவதுமே அரசு சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் முறைக்கும் மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. அனைத்திற்கும் அவசியமான ஒன்றான ரேஷன் கார்டு அப்ரூவல் கிடைக்க எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெளிவாக உள்ளே குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு அப்ரூவல்:
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்று வருகின்றனர். அந்த ரேஷன் கார்டு மழுவு விலை பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் சிலிண்டர் முன்பதிவு செய்யவும் ரேஷன் கார்டு தான் அவசியமானதாக ஒன்றாகிவிட்டது. இந்த ரேஷன் கார்டுகளுமே தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது மூன்றே நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் கிடைக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பின்பற்றவும்.
மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு பட்டியல் இதோ!
முதலில் https://tnpds.gov.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ் உள்ள புதிய மின்னணு அட்டை விண்ணபிக்க என்கிற பகுதியை கிளிக் செய்யவும். அதற்கு பிறகு புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு Name of family head என்ற பாக்ஸின் கீழ் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெயரை சரியாக பதிவிட வேண்டும் மற்றும் முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீடு, உங்களது மொபைல் எண், மெயில் ஐடி ஆகியவற்றை சரியாக பதிவிட வேண்டும். மேலும் அந்த விண்ணப்பத்தில் 5 எம்பி அளவில் இருக்கும் வண்ணம் குடும்ப தலைவருக்கான போட்டோவை இணைக்க வேண்டும். அட்டை தேர்வு என்ற பாக்ஸில் என்ன அட்டை வேண்டும் என்பதை கிளிக் செய்து 5 எம்பி அளவில் இருப்பிட சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும்.
Post Office இல் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – இனி இதெல்லாம் கட்டாயம்!
மேலும், உறுப்பினர்கள் சேர்க்கை என்பதை கிளிக் செய்து குடும்ப தலைவரின் பெயரை இணைக்க வேண்டும். இதன்பிறகு ஆதார் கார்டினை ஸ்கேன் செய்து அத்துடன் இணைக்க வேண்டும். இதன் பிறகு பிறகு உறுப்பினர் சேர்க்கை சேமி என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். இதுமட்டுமல்லாமல் குடும்ப அட்டையில் குழந்தைகளின் பெயரை இணைக்க வேண்டுமென்றாலும் இணைத்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்த பெயரில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும் மாற்றி கொள்ளலாம். இதன் பின்பு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை கொடுத்து அதன் விவரங்களையும் அத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பித்து முடித்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட ஆவணம், விண்ணப்பம் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதற்கு பிறகு விண்ணப்பம் விரைவில் பரிசீலிக்கப்படும்.