தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் – ஆதார் எண் பெற சிறப்பு ஏற்பாடு!
தமிழகத்தில், திருப்பூர் மாவட்டத்தில் 1 முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் பயன்பெரும் வகையில் கே.எஸ்.சி பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையம், உடுமலை, பல்லடம், அவிநாசி வட்டார வள மையங்கள் என 4 இடங்களில் ஆதார் மையங்கள் இயங்குகின்றன.
முக்கிய தகவல்:
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளுக்கு முதல்கொண்டு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில், கல்லூரிகளில் என பல இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடையாள சான்றாக மட்டும் அல்லாது, பல நோக்கங்களுக்கான மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. அந்த வகையில் பள்ளி கல்வித்துறையில் ‘எமிஸ்’ கல்வி வலைதளத்தில், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதார் எண்கள் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இதுவரை ஆதார் எண் பெறப்படாத பகுதிக்கு உட்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் அருகில் இயங்கும் பள்ளி மாவட்ட வட்டார வளமையங்களில் நிரந்தர ஆதார் பதிவு மையம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மார்ச் 31 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – இரவு ஊரடங்கு அமல்? அரசு அறிவிப்பு!
இந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கே.எஸ்.சி பள்ளி வளாகத்தில் 1 முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்காக மட்டும் , உடுமலை, பல்லடம், அவிநாசி வட்டார வள மையங்கள் என 4 இடங்களில் ஆதார் மையங்கள் இயங்கி வருகிறது. இதனை தொடர்ந்து 1 முதல் 10 வயதினருக்கு புதிதாக ஆதார் எண் பதிவிடப்படுகிறது. மேலும் 5 முதல் 15 வயதினருக்கு கைரேகை பதிவு ‘அப்டேட்’ செய்யப்படுகின்றன. இதுவரை 200 பேருக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், தினமும் 10 முதல் 15 பேர் வரை மாணவர்கள் வருகின்றனர்.
தீவிரமடையும் ரஷ்யா, உக்ரைன் போர் – இந்தியர்களை தரைவழியாக மீட்க நடவடிக்கை! பிரதமர் ஆலோசனை!
கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்திலேயே ஆதார் எண் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் முறையாக பதிவு செய்ய குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் ஆதார் மற்றும் குழந்தையை உடன் அழைத்து வர வேண்டும். 5 வயதுக்கு மேல் கைரேகை பதிவிட, குழந்தையுடன் அவர்களை பழைய ஆதார் கார்டை எடுத்து வர வேண்டும். இது முற்றிலும் இலவசம் என்று கே.எஸ்.சி. பள்ளி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் அலீமா கூறியுள்ளார்.