NPS திட்டத்தின் மூலமாக ரூ.1 லட்சம் ஓய்வூதியம் பெறுவது எப்படி? முழு விவரங்களுடன்!
NPS திட்டத்தின் மூலமாக சந்தாதாரர்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தாதாரர்களுக்கு கூடுதலாக இரண்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
NPS திட்டம்:
இந்திய குடிமக்களின் முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் முதலீட்டு திட்டம் தான் NPS திட்டமாகும். இந்த திட்டத்தை அரசு ஊழியர்களுக்காக ஜனவரி 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு முறைகளில் NPS ன் நன்மைகளை பெறலாம். 2004 ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்தவர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு முதல் NPS அமைப்பில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள். 18 வயது பூர்த்தி ஆகிருந்தாலே இந்த திட்டத்தின் கீழ் இணைந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவுறுத்தல்கள்!
ஒருவரின் சொத்து மதிப்புகள், அரசுப் பத்திரங்கள், மாற்று சொத்துக்கள் ஆகியவற்றின் வசதிக்கேற்ப வருமானத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சேர விரும்பும் ஓய்வூதியதாரர் குறைந்தபட்சம் 500 ரூபாய் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம். இதில் இரண்டு முறைகளில் சலுகைகளை பெற முடியும். அதாவது NPS ன் முதல் திட்டமானது செலுத்தப்பட்ட தொகையில் இருந்து 60 சதவீதத்தை திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறார் மற்றும் மீதமுள்ள 40 சதவிகிதம் வருடாந்திர பொருளாக மாற்றி சேமிக்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
NPS ன் இரண்டாவது திட்டமானது குறைந்தபட்சம் 1,000 ரூபாயில் இருந்து துவங்கலாம். இதில் சந்தாதாரர் செலுத்தும் தொகையை விரும்பிய நேரத்தில் முழு தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வரிச் சலுகைகள் எதுவும் கிடையாது. 25 வயதில் இந்த திட்டத்தின் கீழ் சேமிக்க தொடங்கி விட்டால் மாதம் ரூ.5,000 செலுத்தினாலே ஓய்வு பெரும் போது ரூ.21 லட்சமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் 10 சதவீத வருடாந்திர விகிதம் எனில் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1 லட்சமாக பெறலாம்.