ரூபாயில் நட்சத்திர குறியீடு – இது கள்ள நோட்டா? நல்ல நோட்டா? முழு விபரங்கள் இதோ!
இந்திய ரூபாய் நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது. பொதுவாக ரூபாய் நோட்டில் எண் வரிசைகள் இடம்பெற்றிருக்கும். இதில் பிழை ஏதும் இருப்பின் அந்த எண் வரிசையின் முன்பு ஓர் நட்சத்திரக் குறியீடுடன் வரிசை எண் இருக்கும். இது கள்ள நோட்டா? நல்ல நோட்டா? என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
ரூபாயில் நட்சத்திர குறியீடு
இந்தியாவில் கள்ள நோட்டுகளை பதுக்கி வைக்கப்பதை தடுக்க பழைய 500 ரூபாய் மற்றும் பழைய 1000 ரூபாய் ரத்து செய்யப்பட்டு புதிய 500 ரூபாய், புதிய 200 ரூபாய், மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து தற்போது 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. இந்த நிலையில் அண்மைக்காலமாக நட்சத்திர வரிசை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இது பொதுமக்களிடையே கள்ள நோட்டா அல்லது நல்ல நோட்டா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் – முதல்வர் தலையிட வலியுறுத்தல்!
மேலும் இது தொடர்பாக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நூலகத்தில், திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கத்தின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கியின் நட்சத்திர வரிசை ரூபாய் பணத்தாள்கள் குறித்து சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் சங்க நிறுவன தலைவரும், சமூக ஆர்வலருமான விஜயகுமார் மற்றும் நாணயவியல் மற்றும் பணத்தாள்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர் தெரிவித்ததாவது, இந்திய ரிசர்வ் வங்கி பணத்தாள்களில் பிழை மற்றும் குறைபாடு இருப்பின் வரிசை எண்ணில் நட்சத்திர வரிசையுடன் கூடிய பணத்தாள் வெளியிடப்படும்.
Exams Daily Mobile App Download
இது வழக்கமான பணத்தாள் போன்று தான் இருக்கும். ஆனால் எண் வரிசையில் இடம்பெற்றிருக்கும் நட்சத்திர குறியீடு பொதுமக்களுக்கு இது கள்ள நோட்டா என்று சந்தேகத்தை ஏற்படுத்தும். அதாவது ஒரு 500 ரூபாய் நோட்டில் பிழை இருப்பின் அந்த ரூபாய் நோட்டின் எண் பேனலில் கூடுதல் எழுத்து இடம்பெறும். அதாவது பணத்தாள் தொடரில் உள்ள அதே எண்ணுக்கு முன்பு ஒரு நட்சத்திர குறியீடு பதிக்கப்பட்டிருக்கும். இது இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்படுவதால் இது சட்டப்பூர்வமாக பயன்படுத்த கூடியதாகும். அதனால் பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாமல் இதனை பயன்படுத்தலாம் என்று தெரிவித்தனர்.
அப்படியானால் அந்த நோட்டுக்களின் மதிப்பு அதிகமா