தமிழக அரசில் 175 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழகம் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வந்ததை அடுத்து அரசு மற்றும் தனியார் துறைகள் வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அரசுத்துறை போட்டித்தேர்வுகளான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியாகியது. நாளை தமிழகம் முழுவதும் குரூப் 2, 2A தேர்வும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து குரூப் 4 & VAO தேர்வு ஜூலை 22 மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் பகுதிநேர சுகாதாரப் பணியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐந்தே நிமிடத்தில் பான் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
இத்துறையின் கீழ் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 175 பகுதி நேர சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதியாக தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையதள பக்கத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
இதனை முழுமையாக பூர்த்தி செய்து மே 30ஆம் தேதிக்குள் அந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இவர்கள் மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் பணியாளராக நியமிக்கப்படுவார்கள். இந்த பகுதிநேர சுகாதாரப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஊதியம் வழங்கப்படும்.