தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – டூப்ளிகேட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - டூப்ளிகேட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - டூப்ளிகேட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – டூப்ளிகேட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

ரேஷன் அட்டை ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய முக்கிய ஆவணம் ஆகும். பல இடங்களில் அடையாள ஆவணமாகவும், முகவரி சான்றிதழாகவும் ரேஷன் கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த ரேஷன் அட்டை தொலைந்து விட்டால் யாரிடம் கேட்பது, என்ன செய்வது, எப்படி திரும்ப வாங்குவது என்றெல்லாம் யோசிப்போம். ஆனால் இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டூப்ளிகேட் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல், அரசின் நிதியுதவி போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டில் தற்போது புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை – பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அதாவது, ரேஷன் கார்டு வைத்திருந்தும் அதைப் பயன்படுத்தாமல் இருந்தால் அந்த ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். இந்த நடவடிக்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்க வேண்டும் என்பதே இந்த விதிமுறையின் நோக்கமாகும். மேலும் சிலர் ரேஷன் பொருட்களை வாங்கி அதை கள்ளச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த மோசடிகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதியோடு முடிந்து விட்ட நிலையில், தற்போது இதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரேஷன் கார்டை கவனக்குறைவால் நாம் தொலைத்து விட்டால், அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் கலக்கத்தில் இருப்போம். ஆனால் இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய ரேஷன் அட்டை நகலை ஆன்லைனில் விண்ணப்பித்து வாங்கலாம்.

  • முதலில் https://www.tnpds.gov.in/ என்றவெப்சைட்டில் செல்ல வேண்டும்.
  • உள்ளே சென்றதும் பயனாளர் IDஐ பதிவிட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
  • இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் ஓப்பன் ஆகும்.
  • அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து அதை டவுன்லோடு செய்ய வேண்டும்.
  • இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, நபரின் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!