ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – புதிதாக உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
புதிதாக ஒரு நபர் திருமணம் செய்து இருந்தால் கண்டிப்பாக ரேஷன் அட்டையில் புதிதாக திருமணமானவர் பெயரை சேர்க்க வேண்டும். தற்போது எப்படி ஒரு உறுப்பினரின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்கலாம் என்பது குறித்தான அனைத்து தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைகள்:
தமிழகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான அன்றாடத் தேவை பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். ரேஷன் கார்டுகள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து திட்டங்களையும் பெறுவதற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இந்த ரேஷன் கார்டு திட்டத்தில் பலவிதமான நலத் திட்டங்களை அவ்வப்போது அரசு புகுத்தி வருகின்றது.
ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு!
இத்தகைய ரேஷன் அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, முகவரி ஆகியவை எந்தவித பிழையும் இல்லாமல் தெளிவாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். புதிதாக ஒரு நபர் திருமணம் செய்துகொண்டால் திருமணமானவரின் பெயரை கட்டாயமாக ரேஷன் அட்டைகளில் இணைக்க வேண்டும் மற்றும் ஏற்கனவே இவரின் பெயர் வேறு ஒரு ரேஷன் கார்டில் இருந்தால் அந்தப் பெயரை நீக்க வேண்டும். ஒரு நபர் இறந்து விட்டாலும் கண்டிப்பாக ரேஷன் கார்டில் இருந்து இறந்தவரின் பெயரை நீக்கம் செய்ய வேண்டும். தற்போது எப்படி ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர்களின் பெயரை சேர்ப்பது என்பது குறித்த தகவலை பார்க்கலாம்.
Exams Daily Mobile App Download
பெண் உறுப்பினர் அட்டையில் கண்டிப்பாக கணவரின் பெயர் இருக்க வேண்டும். மேலும், குடும்பத்தில் குழந்தை பிறந்தாலும் அந்த குழந்தையின் பெயரையும் கண்டிப்பாக ரேஷன் அட்டைகளில் இணைக்க வேண்டும் மற்றும் முகவரி மாற்றம் செய்து இருந்தாலும் அதற்கான அப்டேட்டை அவ்வப்போது செய்துவிட வேண்டும். இந்த வழிமுறைகளை செய்த பிறகு ரேஷன் அலுவலகத்திற்கு சென்று அந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் ரேஷன் கார்டில் உறுப்பினரின் பெயரை சேர்க்கலாம். ஆன்லைன் மூலமாக உறுப்பினரின் பெயரை சேர்க்க மாநில உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று வீட்டிலிருந்தபடியே உறுப்பினரின் பெயரை சேர்த்து விடலாம்.