தமிழக அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் குறித்த செயல்முறை – கல்வி இயக்குனர் வெளியீடு!
தமிழகம் முழுவதும் 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளில் மாணவர் சேர்க்கை தொடங்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 40,000க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தும் பொருட்டு கடந்த 2018ம் ஆண்டு 2381 அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகள் தொடங்கப்பட்டது. மேலும் LKG மற்றும் UKG ஆகிய இரு வகுப்பு மாணவர்களையும் கையாள ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பணியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தொடக்க கல்வி மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் LKG மற்றும் UKG வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீண்டும் 1 முதல் 5ம் வகுப்புகளை கையாள பணி மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதனால் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு கற்றல், கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி 2381 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், இப்பணியிடங்கள் நிரப்பப்படும் வரை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் LKG மற்றும் UKG வகுப்புகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்த அறிவிப்பை தொடக்க கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
தனியார் நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான LTI நிறுவன வேலைவாய்ப்பு..!
அதில் கூறியிருப்பதாவது,
- தமிழகத்தில் 2022-23ஆம் கல்வி ஆண்டிற்கான LKG மற்றும் UKG வகுப்பு மாணவர் சேர்க்கை ஏற்கனவே அறிவுரை வழங்கியபடி நடைபெற்று வருகிறது.
- இதனை தொடர்ந்து புதிதாக சேரும் மாணவர் விவரங்களை கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது பள்ளிகளில் கூடுதலான வகுப்பறைகள் இருந்தால் அவற்றை LKG மற்றும் UKG வகுப்பு மாணவர்களுக்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- அதே சமயம் கூடுதலான வகுப்பறை இல்லையெனில் அங்கன்வாடி மையங்களையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- மேலும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை தேவை, கழிப்பறை உள்ளிட்ட வசதி தேவைபட்டால் தொகுத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- LKG மற்றும் UKG வகுப்பு குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் சத்துணவு வழங்கப்பட வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களில் கூடுதலான பணியாளர் தேவைபட்டால் மாவட்ட ஆட்சியரை அணுகி தேவைப்படும் பணியிடங்களை நிரப்பி கொள்ளலாம்.
- மேற்கண்ட அனைத்தையும் தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.