PAN கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்தியாவில் பான்கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. எதிர்பாராத விதமாக உங்கள் பான் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம் ஆன்லைன் மூலம் எளிதாக பெறலாம். அதற்கான எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பான் கார்டு:
இந்தியாவில் நிரந்தர கணக்கு எண் என்பதே பான் கார்டு இதில் வருமான வரித்துறையினரால் வழங்கப்படும் 10 இலக்கங்கள் கொண்ட நிரந்தர கணக்கு எண் இடம் பெற்றிருக்கும். 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். இவர்களுக்கு பான் கார்டு அவசியமாகும். மேலும் 50,000 ரூபாய்க்கு மேல் வங்கிகளில் பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான் கார்டு எண் கட்டாயமாகும். தற்போது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக பான் கார்டு உள்ளது. மேலும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கும் பான் கார்டு பயன்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வேஷ்டி, சேலைகள் – பணிகள் தீவிரம்!
பங்குச்சந்தையில் முதலீடு செய்தாலோ, ஏதேனும் வியாபாரத்தில் செய்தாலோ பிற பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ அவரிடம் கண்டிப்பாக பான் கார்டு இருக்க வேண்டும். இவ்வளவு முக்கியம் வாய்ந்த பான் கார்டு எதிர்பாராத நிலையில் தொலைந்து விட்டால் கவலை வேண்டாம். ரீபிரிண்டட் பான் கார்டை நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் எளிய வழிமுறைகளை பின்பற்றி என்.எஸ்.டி.எல் தளத்தில் புதிய கார்டு பெறலாம். இல்லையெனில் எளிதாக ஆன்லைன் மூலம் இ-பான் கார்டுக்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
பான் கார்டு பெறும் வழிமுறைகள்:
- https://www.onlineservices.nsdl.com/paam/ReprintEPan.html என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் Instant PAN through Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்
- “Get New PAN” என்பதைக் கிளிக் செய்து திரையில் தோன்றும் படிவத்தை பூர்த்தி செய்யவும்.
- சரியான உங்கள் ஆதார் அட்டை எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவிட வேண்டும்.
- பிறகு மின் அஞ்சல் முகவரியை முகவரியை பதிவிட வேண்டும். பிறகு பத்து நிமிடங்களில் பான் கார்டு கிடைத்து விடும்.
- அடுத்ததாக நிரந்தர முகவரிக்கு அஞ்சல் மூலமாக உங்களுக்கு பான் கார்டு அனுப்பப்படும்.